
வாழிய தமிழே
வாழிய வாழிய எங்கள் தமிழே...! தாய் வழி நாம் பெற்ற தங்கத் தமிழே.. ! ஞாலமும் ஆண்டிடும் செம்மொழித் தமிழே! ஞானத்தின் வானமாய் தவழ்ந்திடும் தமிழே.! ஏலேலோ... ஏலேலோ.. ஏலேலோ.. ஏலேலோ... வான் பொழிந்திட மண் நனைத்திட வேர் உயிர்ப்பதுபோல்! ஊர் இழுத்திட தேர் நகர்ந்திட.. ஊர்வலமதுபோல் பார் புகழ்ந்திட நாம் உயர்ந்திட ஒன்றாய் நின்றால் நன்றே என்றும் உண்டாகும்... எல்லாமே வென்றாகும்! ஏலேலோ... ஏலேலோ!! (நான் எழுதிய பாடல் வரிகளிலிருந்து) *வீரா* 9688246836
1114כל הזכויות שמורות.
תגובות 0












